திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Saturday, November 10, 2012

திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர்



ஸ்ரீமதே இராமானுஜாய நம:

திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடம் திருக்கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன்பாக உள்ள பதினாறுகால் மண்டபத்தின் எதிரே அமைந்துள்ளது. திருக்கோவலூர் த்ரிவிக்ரம சுவாமி தேவஸ்தானம் திருக்கோவலூர் ஜீயர் சுவாமி மடத்தைச் சேர்ந்தது ஆகும். ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமியின் நியமனத்துடனே நிர்வாகங்கள், கைங்கர்யங்கள் மற்றும் உத்சவம் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த திருமடத்தில் ஜீயர் சுவாமியாக எழுந்தருளி இருந்த முதல் பன்னிரண்டு சுவாமிகள் சன்யாசிகளாகவும், அதன் பிறகு எழுந்தருளி இருந்த/வர்த்தமான சுவாமி உட்பட அனைவரும் கிருஹஸ்தர்கள் ஆவர். க்ருஹச்தர்களாக இருந்தாலும் அவர்களையும் ஜீயர் சுவாமி என்றே போற்றப்படுகிறார்கள். 


                                                திருமடத்தின் நுழைவு வாயில்: 



ஒன்னான ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமியும் - வர்த்தமான சுவாமியும்


அடுத்த பதிவு தொடக்கமாக திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமியின் வைபவத்தை சேவிக்கலாம்.

தாசானு தாசன் 

இராமானுஜ சிஷ்யன் 
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி திருவடிகளே சரணம்