திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Saturday, February 12, 2022

தை மிருகசீருஷம் - ஒன்றான திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திருநக்ஷத்ரம்


திருக்கோவலூர்  ஒன்றான   ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி வாழி திருநாமம் 

தையில் மிருகசீருடத்தில் தரணி வந்தோன் வாழியே*
தண் கோவலூர் நகர் விளங்கத் தானுதித்தான் வாழியே*
வையகத்தில் ஈடுரைக்கும் வாசகத்தோன் வாழியே*
வரயோகி கருணையினால் வாழ்ந்தருள்வோன் வாழியே*
செய்ய இடைகழி ஆயன் செல்வம் வளர்த்தோன் வாழியே*
சீராரும் கோவலூர் சிறக்க வந்தோன் வாழியே*
மையல் மிகு கோவல் எம் இராமானுஜ முனி வாழியே*
மலரடியும் முக்கோலும் மாநிலத்தில் வாழியே*

ஆரியர்கள் வாழ அருளிச்செயல் வாழ*
தாரணியில் பூங்கோவலூர் வாழ*
சீருடைய  மன்னு  புகழ் எம்பெருமானார் முனியே மாயவனே 
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

No comments: