திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Wednesday, December 8, 2021

திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடம் - கைசிக ஏகாதசி - பிரம்மரத உத்ஸவப் பத்திரிகை




 



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


திருக்கோவலூர் 26 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி பட்டாபிஷேக மஹோத்ஸவ ப்ரகடனப் பத்திரிகை


 





ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமியின் பரமபத ப்ராப்தி

ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய உபய வேதாந்தாசார்யராய் எழுந்தருளியிருந்த திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ராமாநுஜாசார்யார் ஸ்வாமி ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் 23 ஆம் தேதி (09-11-2021) செவ்வாய் கிழமை ஸுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார்/திருநாடு அலங்கரித்தார்.

ஸ்வாமியைப் பற்றிய ஓர் பதிவு நம் கீதாசார்யன் பத்திரிகையில்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Saturday, September 4, 2021

திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மாடாதிபதி, ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டபநாசார்ய உபய வேதாந்தாசார்யராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸராமாநுஜாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் - ஆவணி ஆயில்யம்



தனியன்
ஸ்ரீ சௌநகாந்வய ஸரித் பரிபூர்ண சந்த்ரம்
ஸ்ரீ வேங்கடேச குரூத்தம புத்ர ரத்நம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய ஜாலம்
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ குருவர்யம் அஹம் ப்ரபத்யே ||

வாழித்திருநாமம்
வாழிய நல்திரு வேங்கடவர் மாதகவால்
வாழ்ந்திடும் ஸ்ரீநிவாச மாகுரவன் - வாழியவன்
மாறன் மறையும் மும்மந்திரச் செம்பொருளும்
தேறிடச் சீடர்க்கு உரைக்குஞ் சீர்

ஆவணியில் ஆயில்யத்து அவதரித்தோன் வாழியே
அலகரையும் பதிவந்த தாதைசெல்வன் வாழியே
கோவலூர் ஆயனார் குணமுரைப்போன் வாழியே
குலவும் அடியார்கள்வினை கொய்தருள்வோன் வாழியே
பூவளரும் நாச்சியரால் பொலிவுற்றோன் வாழியே
பொய்கைமுதல் பதின்மர்பாப் பொருளுரைப்போன் வாழியே
காவலராம் வேங்கடவர் கழல் வாழியே
கார்பொலியும் சீநிவாச வாரியன் தாள் வாழியே

பூங்கோவலூர் வாழ ஆயன் புகழ்வாழ
தேங்குபுகழ் மாறன் மறைவாழ - தீங்கிலா
துன்னுபுகழ் சீநிவாச ராமாநுசாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

தீந்தமிழ் வேதியர் சிந்தை மகிழ்ந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தீதர விளங்கிடு நாள்
கந்த மலர்ப்பொழில் குருகூர் நாதன் கலைகள் தழைத்திடுநாள்
காரமர் மேனியர் கோவல் நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்
எந்தை யெதிவரர் சிந்தைக் குளிர்ந்து இனிது உகந்திடு நாள்
எழில் உறு எம்பெருமானார் சீயர் இன்புற வந்தவர் நாள்
அந்தமில் சீர் சீநிவாச முனிப்பரன் அவதாரம் செய்திடுநாள்
அழகு திகழ்ந்திடும் ஆவணியில் திரு ஆயில்யம் எனு நாளே

வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Saturday, August 28, 2021

திருக்கோவலூர் 24 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திருநக்ஷத்ரம் - ஆவணி ரோஹிணி

 ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ ஸ்ரீமல்லக்ஷ்மணார்ய முநயே நம:


திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாசார்ய உபயவேதந்தாசார்யராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ திருவேங்கடராமாநுஜாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் (24 ஆம் பட்டம்)

ஸ்ரீமுக வருஷம் ஸ்ரீஜயந்தித் திருநாளன்று (ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம்) ஸ்ரீ . வே விஜயராகவாச்சாரியர் ஸ்வாமிக்கும் ஸ்ரீமதி கோமளவல்லி அம்மங்காருக்கும் திருக்குமாரராக திருவவதரித்தவர்.

தனியன்
ஸ்ரீ சௌநகாந்வய ஸரித் பரிபூர்ண சந்த்ரம்
ஸ்ரீ வீரராகவ குரூத்தம புத்ர ரத்நம்
தஸ்மாதவாப்த நிகமாக்ந ரஹஸ்ய ஜாலம்
ஸ்ரீ வேங்கடேச குருவர்யம் அஹம் ப்ரபத்யே

வாழித்திருநாமம்

வாழிய நல்வீரராகவர் தம் வானருளால்
வாழ்திரு வேங்கட மாகுரவன் - வாழியவன்
எட்டெழுத்தில் உட்பொருளும் ஈட்டின் நிறைபொருளும்
சீட்டர் தமக்குரைக்கும் சீர்

ஆவணி ரோஹிணி நாள் அவதரித்தோன் வாழியே
அலகரையும் பதிவந்த அண்ணலோன் வாழியே
கோவல் இடைகழி ஆயன் குணம் உரைப்போன் வாழியே
குலவும் அடியார்கள் வினை கொய்தருள்வோன் வாழியே
பாவருஞ்சீர் தமிழ் மறைகள் பரிந்து கற்றோன் வாழியே
பகர் வீரராகவன் தன் பைங்கழலோன் வாழியே
தேவன் உறை பதிகள் தமை சிந்தை செய்வோன் வாழியே
தீதில் திருவேங்கட நல் தேசிகன் தாள் வாழியே

திண்கோவலூர் வாழ சீயர் மடம் வாழ
வண்குருகூர் மாறன் மறைவாழ - எண்ணருசீர்
மன்னு திருவேங்கட ராமாநுஜாசாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

நாள் பாட்டு

மன்னிய நான்மறையாளர் சிறந்து மகிழ்ந்திட வந்தவர் நாள்
மாறன் மறைப்பொருள் வீறு பொலிந்து மலிந்து விளங்கிடு நாள்
நன்னல வாரியர் செய்தருள் நற்கலை நானிலத்து ஓங்கிடு நாள்
நவில் அரு மெய்பெருமானார் சீயர் நல்லருள் ஏய்ந்திடு நாள்
வன்கழல் சேர் த்ரிவிக்ரமன் செல்வம் வளர்ந்து தழைத்திடு நாள்
மாசறு வீரராகவனார் செழும் வாழ்வு முளைத்திடு நாள்
மன் புகழ் ஆவணித் திங்கள் ரோஹிணி வாய்ந்து ஒளிரும் திருநாள்
வாழி திருவேங்கட மாகுரு வந்திடுங் கேழறு நன்னாளே

அவதாரம் - 1933 ஆம் வருடம்
ஜீயர் ஸ்வாமியாக பட்டாபிஷேகம் செய்வித்த வருடம் - 1945
திருநாடு அலங்கரித்த வருடம் - 1985

வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்